Monday 20 December, 2010

ஆசை

நான் பெண்ணாக மாறிப்போனால்
எப்படி இருப்பேன் எனக் கேட்டேன்
எதிர் நிற்கும் காதலியிடம்...
அடப் போடா பைத்தியம்
இப்பொழுதும் நானாகத் தானடா
நீ வாழ்கிறாய் பிறகென்ன ஆசையென்று
தலை கொட்டிச் செல்கிறாள்...

No comments:

Post a Comment