இறுக்க அணைத்த நம் உறக்கத்திலே எங்கே நான் முழித்தால் உன் உறக்கம் கலையுமென நானும், உன் முழிப்பில் என் உறக்கம் கலையுமென நீயும், கண் மூடியபடியே படுத்திருக்க, கட்டுண்டு போகிறது காதலும்...
பெண்களிடம் மறைக்கும் பழக்கம் அதிகமென பலபேர் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால் இன்று தான் புரிந்து கொண்டேன் தாயே குடிகார தந்தையிடம் மறைத்து எனக்காய் சேர்த்து வைத்த திருமண நகைகளில்...
உன்னை கண்டிடாத இடத்திற்கு சென்றிட வேண்டுமென ஆசை பட்டேனடி.. கண் காணாமல் போனாலும் அது நடந்திடாதென, கனவிலும் உன் பிம்பம் தந்து வெறுப்பேற்றுகிறது காதல்...
அளவில் பெரிய பூந்தோட்டத்தில் அழகிய வண்ணத்துப் பூச்சியை தேடுவதே பெரும்பாடாய் இருக்க, உன்னைப் போலொரு அழகு ரோஜாவை தேடிட வைக்கிறான் இறைவன் இந்த நிஜ உலகில் உன்னை தொலைத்த என்னை...