ஆழிப் பேரலையாய்
உன் நினைவுகள்
என்னைத் தாக்கிட,
தனிமைத் தீவின்
ஒற்றைப் படகாய்
நொறுங்கித் தான் போகிறது
என் நிம்மதியும்..
Sunday 15 January, 2012
உன் ஒற்றைப் பார்வையில்
அடங்காத திமிருடன்
அலைந்த என்னிதயம்
நொடியில் அடங்கிப் போகிறது
உன் ஒற்றைப் பார்வையில்...
அலைந்த என்னிதயம்
நொடியில் அடங்கிப் போகிறது
உன் ஒற்றைப் பார்வையில்...
திரணியற்ற என் காதல்
உன் திமிரான அழகைப் போலவே
உன் நினைவுகளுக்கும்
சற்றே திமிரு அதிகம் தான்.
அதனாலோ என்னவோ
திமிற வைத்து சுற்றவைக்கிறது
திரணியற்ற என் காதலை
உன் பின்னே..
உன் நினைவுகளுக்கும்
சற்றே திமிரு அதிகம் தான்.
அதனாலோ என்னவோ
திமிற வைத்து சுற்றவைக்கிறது
திரணியற்ற என் காதலை
உன் பின்னே..
மறு ஜென்மத்தில் நம்பிக்கை
மறு ஜென்மத்தில்
நம்பிக்கை கொண்டு வந்தாயடி,
உன் காதல் பார்வையில்
ஒவ்வொரு முறையும்
ஜெனிக்க வைத்து...
நம்பிக்கை கொண்டு வந்தாயடி,
உன் காதல் பார்வையில்
ஒவ்வொரு முறையும்
ஜெனிக்க வைத்து...
மடத்தன அறிவாளியாய்
கடும் குளிரில்
வியர்வைக்கு விசிறி விற்கும்
மடத்தன அறிவாளியாய்
எதிர் பார்க்கிறேன்
கடுகளவும் கனியாத
உன் காதலை..
வியர்வைக்கு விசிறி விற்கும்
மடத்தன அறிவாளியாய்
எதிர் பார்க்கிறேன்
கடுகளவும் கனியாத
உன் காதலை..
மனம் கொத்திப் பறவை
குடிகொள்ள
மரம்கொத்தும் பறவைக்கு நடுவில்
என் இதயத்துள் குடிகொண்டு
கலாப இம்சை பண்ணும்
மனம் கொத்திப் பறவை நீ..
மரம்கொத்தும் பறவைக்கு நடுவில்
என் இதயத்துள் குடிகொண்டு
கலாப இம்சை பண்ணும்
மனம் கொத்திப் பறவை நீ..
உணர்த்தியது அழுத்தமாய்
உன் பெருங்காதலை
உணர்த்தியது அழுத்தமாய்
என் மணிக்கட்டில் பதிந்த
உன் உள்ளங்கை ரேகைகள்
கை பிடித்து நடக்கையில்..
உணர்த்தியது அழுத்தமாய்
என் மணிக்கட்டில் பதிந்த
உன் உள்ளங்கை ரேகைகள்
கை பிடித்து நடக்கையில்..
மகிழும் இதயம்
கண்ணாடி ஜன்னலில் படிந்த
மழை துளியை விரலில்
இணைத்து மகிழும் இதயம்,
ஒவ்வொரு நாளின்
உன் அசைவுகளை
அடுக்கிப் பார்ப்பதிலும்...
மழை துளியை விரலில்
இணைத்து மகிழும் இதயம்,
ஒவ்வொரு நாளின்
உன் அசைவுகளை
அடுக்கிப் பார்ப்பதிலும்...
நிலவுக்கான நிழல் காண,
ஒவ்வொரு பொருளுக்குமான
நிழல் பார்க்கையில்,
நிலவுக்கான நிழல் காண,
நடு இரவில்
உன்னை எப்படியடி எழுப்ப...
நிழல் பார்க்கையில்,
நிலவுக்கான நிழல் காண,
நடு இரவில்
உன்னை எப்படியடி எழுப்ப...
உன் கழுத்தேறிய தாலி..
உன்னை
எனக்குச் சொந்தமாகிய
நிமிடம் முதலே,
என்னைவிட அதிகமாய்
உன்னை சொந்தமாக்கிட
வேண்டுகிறது...
எனக்குச் சொந்தமாகிய
நிமிடம் முதலே,
என்னைவிட அதிகமாய்
உன்னை சொந்தமாக்கிட
வேண்டுகிறது...
Friday 13 January, 2012
சரி பார்த்துக் கொள்கிறது
வெகுவாய் தெரிந்திருந்தும்
அடிக்கடி சொல்லி
சரி பார்த்துக் கொள்கிறது
மனம் - உன் பெயரை..
அடிக்கடி சொல்லி
சரி பார்த்துக் கொள்கிறது
மனம் - உன் பெயரை..
நிலவும் நீயும்
இரவில்
உயிர் முழித்திருக்க
நிழல் மட்டும் உறங்கும் விந்தை.
நிஜமான நிலவிலும்,
நிழலான உன்னிலும்..
உயிர் முழித்திருக்க
நிழல் மட்டும் உறங்கும் விந்தை.
நிஜமான நிலவிலும்,
நிழலான உன்னிலும்..
ஒவ்வொரு நொடியும்
தன் கடைசி உயிரின்
நொடி வரையிலும்
புல்லிடம் - தன்
அதீத காதலை வெளிப்படுத்தும்
பனித்துளியாய் - என்
ஒவ்வொரு நொடியும் உன்னோடு...
நொடி வரையிலும்
புல்லிடம் - தன்
அதீத காதலை வெளிப்படுத்தும்
பனித்துளியாய் - என்
ஒவ்வொரு நொடியும் உன்னோடு...
விருப்பப் பட்டியல்
நீ விரும்பி ரசிக்கும்
ஒவ்வொரு பொருளுமாய்
நானாக மாறிட
வரம் கேட்கிறேன்,
உன் விருப்பப் பட்டியலில்
நானில்லாக் காரணத்தில்...
ஒவ்வொரு பொருளுமாய்
நானாக மாறிட
வரம் கேட்கிறேன்,
உன் விருப்பப் பட்டியலில்
நானில்லாக் காரணத்தில்...
வெளிச்சத்திற்கு கருமை பூச
பகலின் வெளிச்சத்திற்கு
கருமை பூசி அழிக்கிறேன்.
இரவில் கிடைக்கும்
உன்னுடனான நெருக்கத்திற்காய்..
கருமை பூசி அழிக்கிறேன்.
இரவில் கிடைக்கும்
உன்னுடனான நெருக்கத்திற்காய்..
உன் பெயர்.
உன்வசம் உள்ள
கவிதை புத்தகத்தில் மட்டும்
முன்னுரைக்கு முன் பக்கத்திலேயே
கவிதை ஆரம்பித்து விடுகிறது.
கவிதை புத்தகத்தில் மட்டும்
முன்னுரைக்கு முன் பக்கத்திலேயே
கவிதை ஆரம்பித்து விடுகிறது.
வலி
உன் இதழ்கள் சுழற்றிய
வார்த்தை சாட்டைகூட
இவ்வளவு வலி
தரவில்லையடி - உன்
இதழ் பூட்டிய
மௌனத்தைப் போன்று...
வார்த்தை சாட்டைகூட
இவ்வளவு வலி
தரவில்லையடி - உன்
இதழ் பூட்டிய
மௌனத்தைப் போன்று...
நீ தந்த நினைவிலே
சூரியனின் இரவல் ஒளியிலேயே
இரவின் தனிமையில்
காலம் கடத்தும்
நிலவின் பிரதியாய்,
நீ தந்த நினைவிலே
நானும் வாழ்ந்துவிடுகிறேன்..
இரவின் தனிமையில்
காலம் கடத்தும்
நிலவின் பிரதியாய்,
நீ தந்த நினைவிலே
நானும் வாழ்ந்துவிடுகிறேன்..
வாகன ஓட்டியாய் காற்று
இரவில் நம்மிடையே
நுழைந்து செல்ல,
காத்துக் கிடக்கிறது,
பச்சை விளக்கை
எதிர் பார்த்து காத்திருக்கும்
வாகன ஓட்டியாய்
காற்றும்...
நுழைந்து செல்ல,
காத்துக் கிடக்கிறது,
பச்சை விளக்கை
எதிர் பார்த்து காத்திருக்கும்
வாகன ஓட்டியாய்
காற்றும்...
தூங்காத மனம்
அதற்குள் விடிந்ததற்கு
கோபம் கொள்ளும் மனம்
எப்பொழுது விடியும் என்றே
உறங்கப் போகிறது
உனைக் கண்ட நாள் முதல்...
கோபம் கொள்ளும் மனம்
எப்பொழுது விடியும் என்றே
உறங்கப் போகிறது
உனைக் கண்ட நாள் முதல்...
மௌனம் பேசும் காற்று
என் ஏக்கத்தினையும்
வேதனைகளையும்
தன்னில் ஏற்றிக் கொண்டும்
ஏனோ உன்னிடம் சொல்லாமலே
மௌனம் பேசுகிறது காற்று...
வேதனைகளையும்
தன்னில் ஏற்றிக் கொண்டும்
ஏனோ உன்னிடம் சொல்லாமலே
மௌனம் பேசுகிறது காற்று...
Wednesday 11 January, 2012
பெயர் இல்லையே
உனக்குப் பிடித்த
கவிதைகளை எல்லாம்
கோடிட்டு காட்டு என
கவிதை புத்தகம்
ஒன்றினை தந்தாள்..
மறுநாள் பார்க்கையில்
எத்தனை கவிதை கோடிட்டாய்
எனக் கேட்கையில்,
எந்தப் பக்கத்திலும்
உந்தன் பெயர் இல்லையே
எனத் திருப்பிக் கொடுத்தேன்...
கவிதைகளை எல்லாம்
கோடிட்டு காட்டு என
கவிதை புத்தகம்
ஒன்றினை தந்தாள்..
மறுநாள் பார்க்கையில்
எத்தனை கவிதை கோடிட்டாய்
எனக் கேட்கையில்,
எந்தப் பக்கத்திலும்
உந்தன் பெயர் இல்லையே
எனத் திருப்பிக் கொடுத்தேன்...
இடம் இல்லையாம்
வாரத்திற்கு ஒருமுறை
நகம் கடித்து துப்படி.
புதையலை சேர்த்து வைக்க
இடம் இல்லையாம்
எறும்புகளிடம்..
நகம் கடித்து துப்படி.
புதையலை சேர்த்து வைக்க
இடம் இல்லையாம்
எறும்புகளிடம்..
Subscribe to:
Posts (Atom)