கண்ணோடு கண்
நேர் பார்த்திரா தோழியடி நீ...
அன்பு வளர்க்க
அருகாமை தேவை இல்லையென
நிருபித்த அன்புள்ளம் நீ...
நட்பென்ற வார்த்தையில்
உரிமையும், அன்பையும்
அடைக்காக்கும் தோழி நீ...
கிண்டல், கேலி, கோபம் என
உன்னை எது செய்திட்டாலும்
என்னிடமே தானாய் வரும்
நட்பு அலையடி நீ...
எத்தனையோ முறை
தெரிந்தோ தெரியாமலோ
கலந்கடித்தேன் உன் மனதை,
சினம் கொள்ளும் சிறுவனாய்...
உரிமை உள்ள இடத்திலே தானே
ஊடல் இருக்குமெனத் தெரியாத
தோழி உனக்கு...
பொய்களைவிட சிலநேரம்
உண்மைகள் என் வாழ்வில்
தடம் மாறியே பயணிக்கிறது..
உன்னிடம் எடுத்துச் சொல்ல
வார்த்தைகள் தெரியவில்லை..
அதற்கான நேரமும் அமையவில்லை...
என்றாவது ஒருநாள் தோழியே
நீ புரிந்து கொள்வாய் என
எண்ணம் மட்டும் என்னுள்ளே...
புறம் தள்ளிடாமல் ஏற்றுக்கொள்ளும்
என் நட்பென்ற நம்பிக்கையில்...
No comments:
Post a Comment