எங்கள் காதலில்
இனிமைகளுக்குப் பஞ்சமில்லை.
மகிழ்ச்சிகளுக்கு அளவில்லை...
ஒவ்வொரு முறையும்
காதலைப் பற்றி எழுதிட வேண்டி
இனிமைகளை அசை போடுகையில்,
வாழ்ந்த சொர்கத்தை தொலைத்து விட்டு,
நரகத்தில் வெந்து தவிக்கையில்,
கையோடு தழுவிய தாயின் மரணத்தில்
கண்ணீரையே உணவாய் உண்டு
வாழும் குழந்தையின் நிலையில்...
தானாகவே என்னையும் அறியாமல்
என் மனதிற் வழியே,
எழுதுகோலில் சேர்ந்த என் கண்ணீர்,
வார்த்தையாக்கி பிரசவிக்கிறது வலிகளை...
No comments:
Post a Comment