Monday 27 December, 2010

காதல் வரம்

காதலிலே
அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட
பல மடங்கு வலியை அனுபவிக்கக்
கற்றுக்கொள்ள வேண்டும்...
சுமையான வலிகள் தரும் சுகங்கள் தான்
காதலின் கிடைக்கப் பெறா வரம்.
காதலில் வென்று திருமணத்திற்குப் பின்
காதலை தொலைத்து விட்டு
வாழும் மனிதர்களில்
எனக்கோ மரண வாசல் வரை
காதலும் அதன் நினைவுகளும்
துடித்துக் கொண்டே இருக்கும்...
இந்த வரம் ஒன்றே போதும்

No comments:

Post a Comment