கை கோர்த்து நடந்து சென்ற
பாதையில் பதிந்த
இரு ஜோடி பாதச் சுவடுகளில்
இப்பொழுது ஒரு ஜோடி மட்டும் தனியே...
எதிர்கால கனவுகளில்
மூழ்கிக் கிடந்த
இரண்டு இதயங்களில்,
ஒன்று மட்டும் கரையினில்...
வாழ்க்கை என்னும்
கண்ணாம்மூச்சி ஆட்டத்தில்
நிரந்தரமாய் ஒளிந்துகொண்ட
உன்னை கண்டுபிடிக்க முடியாத
குழந்தையின் தவிப்பினில்....
நித்தம் நித்தம்
காதல் நினைவுகளிலே
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும்
இதயங்களில் ஒன்று இயங்காமல்
மற்றொன்று இயங்க வழிதெரியாமல்
நீங்காத வலியோடு...
அவளின் நினைவுகளை
மறக்க நினைக்கும்
என் நினைவுகளை,
மறந்து நகர்ந்து கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை
என்றும் அவளின் நினைவுகளுடனே....
No comments:
Post a Comment