முடிந்து போன நேற்று
எல்லாருக்கும் இறந்த காலமாய்...
எனக்கு மட்டும்
இறப்பினைக் கொணரும் காலம்...
மாலை நேரம்
நம் காதலால்
உன் நினைவில் படும்
கஷ்டங்களை எல்லாம்
இறக்கி வைக்க
கோவில் உள்ளே செல்ல,
நீயோ தூக்கச் சொல்லி அழுகும்
உன் குழந்தையோடு...
சமாதானம் செய்ய தூக்கி வைத்தாய்..
குழந்தையை மட்டுமில்லையடி
உந்தன் காதல் வலிகளையும்
மேற்கொண்டு என்னில்...
No comments:
Post a Comment