Monday 27 December, 2010

என் வலி

என் இதயத்தின் பிம்பம் நீ.
என்னை விட்டுப் போன
ஒவ்வொரு நொடிகளுமே
நெருப்பில் வெந்த இதயத்தில்
திராவகம் ஊறிய வேதனையடி
என்னுள்ளே...

காதலிக்கும் போது
உன் அன்பினை, ஆசையினை
விருப்பத்தினை, காதலினை
எதிர்பார்ப்பினை
சொல்லும் போதெல்லாம்
புலம்பலை தானடி நினைத்தேன்..
கேட்பதை போல இருந்தேன் - உன்
மனதினை முழுமையாக
புரிந்து கொள்ள மறந்தேன்...

அதனால் தான் எனவோ
இன்று என்னை புலம்பலில் விட்டுவிட்டு
அதனை கேட்கக் கூடாத தூரத்தில்
வாழ்கிராயடி அன்பே....

ஒரே இடத்தினில் அடிக்கடி
அடி விழுகையில் மரத்து போகுமடி.
ஆனால் உன் பிரிவால்
ஒவ்வொரு நொடிகளுமே
ஒவ்வொரு அடியென - என் மனதினை
ரணமாக்கிக் கொண்டே செல்கிறது...

நாம் ஒன்றாய் இருந்த
நாட்கள் தானடி - இப்பொழுது
என் இதயத் துடிப்பாய்
துடித்துக் கொண்டிருக்கிறது....

என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முதுமை வேண்டாமடி செல்லமே!
தனிமையும், உன் நினைவுகளுமே
என்னை மரண வாசலை நோக்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
அழைத்துச் செல்கிரதடி - உன்
பிரிவினால் என் மனதினை
முதுமையடையச் செய்து.......

No comments:

Post a Comment