Monday 27 December, 2010

அணைக்காதோ

என் விழிகள் பேசும் பொழுது
உன் மௌனம் பேசாதோ...

என் சுவாசம் தேடும் பொழுது
உன் வாசம் கிடைக்காதோ...

என் கண்கள் பார்க்கும் பொழுது
உன் இதழ்கள் மலராதோ...

என் கவிதைகள் படிக்கும்பொழுது
உன் கனவுகள் திறக்காதோ...

என் நினைவுகள் தோன்றும்பொழுது
உன் மறுப்பு கலையாதோ...

என் அவஸ்தைகள் பார்க்கும்பொழுது
உன்னிடம் இறக்கம் பிறக்காதோ...

என் மரணம் தழுவும் பொழுதும்
உன் காதல் அணைக்காதா....

No comments:

Post a Comment