Tuesday 28 December, 2010

பிறந்த நாள்

வழக்கமாய் நடு இரவு வரையிலும்
உன் குறுஞ்செய்தி என்னை கொஞ்சிடும்..
என் பிறந்தநாளின் முன்னிரவிலும்
அப்படியே என்று விழித்திருக்கையில் ,

தூங்கிவிட்டதை போலே பாசாங்கு செய்திடுவாயடி,
கொஞ்சிப் பேசலாம் என்ற ஏக்கத்தில் சூடு வைத்து
இராக்கெட்டாய் எகிற வைத்தபடியே
நித்திரையில் என்னை மூழ்கிடச் செய்திடுவாய்...

ஈராறு மணியில் முட்கள் இரண்டும் சேர்ந்ததைக் கூட
நீ கூப்பிடும் அழைப்பு மணியில் தான்
கடிகாரமும் தெரிந்து கொள்ளும்...

தூக்கத்தின் கலக்கத்தில், அலைபேசியின் சிணுங்களில்
உன் கெஞ்சல் குரலில் நீ சொல்லும்
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா செல்லம்"
வாழ்த்துகளில் தானடி நான் பிறந்ததற்கான
அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் உணர்ந்தேன்...

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
நேற்றும் கூட அப்படியே உறங்கிவிட்டேனடி
நீ வாழ்த்த என்னை எழுப்புவாய் என்று...

இன்றும் நீ எனக்கில்லை என்று எடுத்துச் சொல்லி
நித்திரையில் இருந்து எழுப்பிவிட்டது விடியல்
ஏனோ உன் காதலில் இருந்து எழுப்பிவிட மறந்து....

No comments:

Post a Comment