Monday 27 December, 2010

கண்ணீர் வரிகள்

அவளுடன் வாழ்த்த வாழ்க்கையை தான்
வார்த்தையாக்கி உள்ளேன்.
அவளின்றி வாழும் வாழ்வை
கனவாகக் கருதியே வாழ்கிறேன்.
விரைவில் கலைந்துவிடாதா என்று...

மனம் - நடக்காத நிகழ்வுகளையே தான்
அடிக்கடி என்னுகிறதேன்று
என் மூளைக்குத் தெரிகிறது.
தெளிந்து விடத் துடிக்கின்றது - இருப்பினும்
அவளது நினைவுகள் என்னை மூழ்கடித்து விடுகிறது.

அந்த வலியை மனதிலே வைத்திட
எனது சுற்றமும், சூழ்நிலையும் தடுக்கிறது.
அதனால் தான்
என் வலிகளை வடிக்கிறேன்
கண்ணீர் வரிகளாக...

No comments:

Post a Comment