Tuesday 28 December, 2010

மோட்சம்

உன்னைப்பற்றியும்,
என்னைப்பற்றியுமான
எல்லா விசயங்களையும்
பேசி தீர்த்துவிட்டோம்...
இந்நொடி வரையிலும்...

அர்த்தமற்ற பேச்சுகளும்,
முற்றுபெற்றாகிவிட்டது...
மௌனமான நிமிடங்கள் தான்
இனிமேல் பிறக்க எத்தனிக்க இருக்கிறது
என்று தெரிந்த பிறகும்,
அப்புறம் என்கிறாயே...

இனிமேல் உன்னிடம் சொல்லா
என் காதல் மட்டும் தானடி மிச்சம்...
ஒருவேளை அதைத்தான்
அறியத் துடிக்கிறாய் போலும்....

அதையாவது உன் நாவில் சொல்லடி...
காதலுக்கும், அந்த வார்த்தைக்கும்
மோட்சம் கிடைத்துவிடும்...

No comments:

Post a Comment