Tuesday 28 December, 2010

உன் வாழ்த்து

இன்றும் விழித்துக் கொண்டே
துடித்துக் கொண்டிருக்கிறேனடி
என் இதயத்தோடு,
என் இதயமான
உன் வாழ்த்து அழைப்பிற்காக
ஏங்கி பரிதவித்துக் கொண்டே,
நீ இந்நொடி
என்னுடன் இல்லை என்ற போதிலும்
என்ன செய்ய?
நீ மாற்றானுக்கு
மனைவியாய் ஆனாலும்,
உன் காதல் என்றுமே
எனக்குத் தானடி சொந்தம்.

No comments:

Post a Comment