Tuesday 28 December, 2010

என் இதயம்

உன் மேல் காதல் வந்த பொழுதும்,
நீ என்னை விட்டுச் செல்லும் போதும்
கவிதைகள் எழுதினேன் பல - ஆனால்
நாம் காதலித்த காலத்தில் மட்டும் ஏனோ
கவிதைகள் தோன்றவில்லையடி...

காரணம் கேட்க
எனக்காக வாழ்ந்த நீ இல்லை இன்று.
நீயாக என்னில்,
எனக்காய் துடிக்கும்
என் இதயத்திடம் கேட்டேன்..

காதலிக்கும் முன்னும், பிரிந்த பின்னும்
உன்னுடன் நானிருந்தேன்...
உன் எண்ணத்தின் வெளிப்பாடாய்,
எண்ணங்களை பயணித்து
வார்த்தைகளாய் மொழி பெயர்ந்தேன்
உனக்காய் உடனிருந்தேன்.

காதலிக்கும் பொழுது தான்
என்னை அவளிடம் தந்துவிட்டு
அவளைத்தானே
உன் இதயமாய் எண்ணி வாழ்ந்தாய்...
அதனால் தான் என்றவாறே
துடிக்கத் தொடங்கிறது எனக்காய்...

No comments:

Post a Comment