Monday 27 December, 2010

எங்கள் வாழ்க்கை

காதலைச் சொல்லி
ஆண்டுகள் ஏழு வாழ்ந்து...
அவளுக்கு மணமாகி,
இன்றோ தாயாரும் ஆகிவிட்டாள்...
நான் எழுதிய கவிதைகள் அனைத்தும்
என் வாழ்வில் நடந்தைவையே....
அவளோடு வாழ்ந்து முடித்தாகி விட்டது...
அவளோடு வாழ்ந்த நாட்கள்
என் வாழ்வில் திரும்பக் கிடைக்காத
பொக்கிசங்கள்...
வம்படியாக என்னிடம் இருந்து
பறித்துச் செல்லப்பட்ட செல்வங்கள்...
நாங்கள் வாழ்ந்த
வாழ்க்கையின் நினைவுகள் மட்டும்
நெஞ்சோடு புதைந்து போன புதையல்கள்...

No comments:

Post a Comment