வாழ்ந்த நிமிடங்கள் யாவும்
ஒவ்வொரு தீக் குச்சிகளாய்
என்னிதயத்தில் பத்திரமாய்...
உன் பெயர் கொண்டவளோ
உடல் வாகு, நடை உடையவளோ,
தென்றல் காற்றின் தொடுதலிலோ,
குழந்தை விரல் பற்றி நடக்கையிலோ,
நாம் வந்த பதிவை தாங்கி நிற்கும்
இடம் போகையிலோ,
இளம்பிள்ளையின் கெஞ்சல் பேச்சிலோ,
கண்ணில் குடியேறிப் போன கனவுகளிலோ,
பிடித்த பாடல் வரி பார்க்கையிலோ,
உன் அணைப்பை ஞாபகப்படுத்தும்
என் சட்டையின் இருக்கத்திலோ
அடக்க முடியா சிரிப்பின் கண்நீரிலோ,
படபடக்கும் பேச்சினில் தெறித்திடும்
எச்சில் துளியாய் மழைச் சாரலிலும்,
ஒவ்வொரு குச்சியாய் பற்றிட
காதல் நினைவுத் தீயில்
என்னிதயம் பற்றி
எரியத் தொடங்குகிறது அன்பே...
Thursday 25 November, 2010
Saturday 20 November, 2010
தொலைந்து போன
மூச்சின் உஷ்ணம்
எப்படி சொல்லுவேன்
முத்தத்தின் சக்தி
என்னை வாரி அணைத்து
நெஞ்சில் புதைத்திடும் பொருட்டு,
மூச்சும் சில நொடிகள்
இறந்து பிறக்கும் அளவிற்கு
என்னை இறுக அணைத்து,
என் உச்சி முகர்ந்து
நீ தந்த முத்தத்தின் சுகம்
சில நொடிகள் தானாவென்று
சல்லிசாக எண்ணி விட்டேன்...
ஆனால் அதற்காக - என்
ஒவ்வொரு நொடித் தனிமைகளையும்
அந்தச்சுகத்திற்கே இரையாக்கிடும்
சக்தி உண்டென்று அப்பொழுது
தெரியவில்லையடா இந்த சிறுக்கிக்கு...
நெஞ்சில் புதைத்திடும் பொருட்டு,
மூச்சும் சில நொடிகள்
இறந்து பிறக்கும் அளவிற்கு
என்னை இறுக அணைத்து,
என் உச்சி முகர்ந்து
நீ தந்த முத்தத்தின் சுகம்
சில நொடிகள் தானாவென்று
சல்லிசாக எண்ணி விட்டேன்...
ஆனால் அதற்காக - என்
ஒவ்வொரு நொடித் தனிமைகளையும்
அந்தச்சுகத்திற்கே இரையாக்கிடும்
சக்தி உண்டென்று அப்பொழுது
தெரியவில்லையடா இந்த சிறுக்கிக்கு...
Wednesday 17 November, 2010
முத்தம்
தயக்கம்
பருக்கள்
Sunday 14 November, 2010
முத்தம்
உண்மை
உசுப்பிவிட்டாய்
உன்னருகில் நானிருந்தும்
என்னை அணைக்காமல்,
தலையணையை அணைத்து
நித்திரையில் நீந்திய
உன் முதுகினில் படர்ந்து,
கேசத்தைக் கலைத்து,
தாடையின் ரோமத்தில்
என் கன்னம் உரசி,
கன்னத்தில் முத்தமிட்டு
உன் உறக்கத்தினை
கெடுத்தேன் என்பதற்காக,
இப்படியாடா செய்வது
என் காதுமடல் கடித்து
என்னுள் உள்ள என்னை
உசுப்பிவிட்டு - நீ மட்டும்
தூங்கச் செல்கிறாய்...
என்னை அணைக்காமல்,
தலையணையை அணைத்து
நித்திரையில் நீந்திய
உன் முதுகினில் படர்ந்து,
கேசத்தைக் கலைத்து,
தாடையின் ரோமத்தில்
என் கன்னம் உரசி,
கன்னத்தில் முத்தமிட்டு
உன் உறக்கத்தினை
கெடுத்தேன் என்பதற்காக,
இப்படியாடா செய்வது
என் காதுமடல் கடித்து
என்னுள் உள்ள என்னை
உசுப்பிவிட்டு - நீ மட்டும்
தூங்கச் செல்கிறாய்...
பொறாமையோ
பிடிக்கும்
நிஜத்தில் பிடிக்காதது அனைத்தும்
காதலில் பிடிக்கத்தான் செய்கிறது...
உதட்டுச் சாயம் பிடிக்காதென்று
உன்னை திட்டி நோகடித்ததில்
கன்னியின் கண்கள் கலங்கிட,
விழிநீரை நிறுத்தும் பொருட்டு
என் மாரினில் சாய்த்திட்டேன்...
முகத்தினை புதைத்த படியே
நெஞ்சத்தில் இதயத்தின் நேராய்
சன்னமான ஒரு முத்தமிட்டதில்,
சட்டையில் பதிந்த உதட்டின்
தடம் மட்டும் ஏனோ பிடிக்கிறது
விரலால் வருடிக் கொடுக்க...
காதலில் பிடிக்கத்தான் செய்கிறது...
உதட்டுச் சாயம் பிடிக்காதென்று
உன்னை திட்டி நோகடித்ததில்
கன்னியின் கண்கள் கலங்கிட,
விழிநீரை நிறுத்தும் பொருட்டு
என் மாரினில் சாய்த்திட்டேன்...
முகத்தினை புதைத்த படியே
நெஞ்சத்தில் இதயத்தின் நேராய்
சன்னமான ஒரு முத்தமிட்டதில்,
சட்டையில் பதிந்த உதட்டின்
தடம் மட்டும் ஏனோ பிடிக்கிறது
விரலால் வருடிக் கொடுக்க...
கலக்கம்
காத்திருப்பு
மிச்சம்
Saturday 13 November, 2010
புன்னகை
அவ்வளவு ஆசையா
கொஞ்சல்
நகையாடுகிறது
கிடைத்திடுமா
சிவன்கோவில் பின்பக்கம்
அமைதியானதொரு சாலை...
என் வாழ்வில் எத்துணையோ முறை
தனியாக நானும்,
காதலிக்கும் நாட்களில் உன்னுடனும்,
இன்று மணமாகிப் பின்
உன் கரம் பிடித்தும்,
அந்த வழியே தான் கடக்கிறேன்...
சிறந்தது எதுவென்று கேட்கையில்
காதல் நாட்களில் நடந்தது தான்
மிகவும் பிடிக்கும் என்பேன்...
முன்பின் தெரியாத முகமும் கூட
தெரிந்த முகமாய் மிரட்டிடும்,
அடிக்கொரு முறை இதயம்
நொடிக்கு சதம் துடித்திடும்,
மரத்தின் கிளைகள் கூட
நாம் செல்லும் திசை காட்டி
தகவல் தருவதாய் தோன்றிடும்,
சுவர்களுக்கும் கண்கள் முளைத்து
நம்மையே பார்ப்பதாய் பிரம்மை,
வானின் செல்லும் பறவைகள் கூட
நம்மைப் பற்றி தகவல் சொல்வதாய்
எண்ணி பயந்த நிமிடங்கள்,
விட்டிற்கு சென்ற பின்னும்
சகஜ நிலைக்கு திரும்ப
மறுத்தே படபடக்கும் இதயம்,
ஆனாலும் ருசி கண்ட பூனையாய்
மீண்டும் உன்னுடன் நடந்திட
ஒற்றைக் காலில் தவம் கிடக்கும் காதல்,
இவை யாவும் இனிஒருபொழுதும்
கிடைப்பதில்லை என் வாழ்வில்..
அமைதியானதொரு சாலை...
என் வாழ்வில் எத்துணையோ முறை
தனியாக நானும்,
காதலிக்கும் நாட்களில் உன்னுடனும்,
இன்று மணமாகிப் பின்
உன் கரம் பிடித்தும்,
அந்த வழியே தான் கடக்கிறேன்...
சிறந்தது எதுவென்று கேட்கையில்
காதல் நாட்களில் நடந்தது தான்
மிகவும் பிடிக்கும் என்பேன்...
முன்பின் தெரியாத முகமும் கூட
தெரிந்த முகமாய் மிரட்டிடும்,
அடிக்கொரு முறை இதயம்
நொடிக்கு சதம் துடித்திடும்,
மரத்தின் கிளைகள் கூட
நாம் செல்லும் திசை காட்டி
தகவல் தருவதாய் தோன்றிடும்,
சுவர்களுக்கும் கண்கள் முளைத்து
நம்மையே பார்ப்பதாய் பிரம்மை,
வானின் செல்லும் பறவைகள் கூட
நம்மைப் பற்றி தகவல் சொல்வதாய்
எண்ணி பயந்த நிமிடங்கள்,
விட்டிற்கு சென்ற பின்னும்
சகஜ நிலைக்கு திரும்ப
மறுத்தே படபடக்கும் இதயம்,
ஆனாலும் ருசி கண்ட பூனையாய்
மீண்டும் உன்னுடன் நடந்திட
ஒற்றைக் காலில் தவம் கிடக்கும் காதல்,
இவை யாவும் இனிஒருபொழுதும்
கிடைப்பதில்லை என் வாழ்வில்..
கடவுளுடன் கேள்வி
கடவுளைக் கண்டு
கேள்விகள் கேட்டிட அழைத்தேன்...
என்னை ஏன் படைத்தாய்
எனக்கென சொந்தமாய் ஏதுமின்றி...
பார்த்திட நினைப்பதை கண்டிடாமல்
அவளைக் கண்டிடுவதையே
முதலாய தொழிலாய் செய்திடும் கண்கள்...
வார்த்தைகளுக்கு பதிலாய்
அவளது பெயரினையே
மந்திரமாய் ஜெபித்திடும் உதடுகள்...
கவிதை எழுத மறுத்து
அவளது பெயரினை எழுதிடும் எண்ணம்...
என் சுயகுறிப்பு எழுதிடாமல்
அவளைப் பற்றிய விவரங்களை
எழுதித் தள்ளும் கைகள்...
பாடங்களைக் கேட்டிடாமல்
அவள் குரலினை வேதமாய்
தேடிக் கேட்டிடும் செவிகள்...
எனக்கென சிறிதும் நகர்ந்திடாமல்
அவளின் நினைவுகளை எண்ணியபடியே
ஊதாரித்தனமாய் கரைந்திடும் நிமிடங்கள்...
நான் வாழ துடிக்க மறந்து
அவளின் உருவத்தை தன்னுள் வைத்து
பெரு மூச்சு விட்டிடும் இதயம்...
என எனக்காய் படைத்தவை யாவும்
எனக்குச் சொந்தமில்லா நிலையில்,
எனக்காய் நீர் படைத்தது
எதுவென்று கேட்க...
அட மூடா இன்னுமா புரியவில்லை
அவளைப் படைத்ததே உனக்காய் தானே,
உன்னுள் உள்ளவை யாவும் அவளைக்
கண்டுகொண்டு சொந்தம் கொண்டாட
உனக்கின்னும் புரியவில்லையா?
என புன்னகைத்தே மறைந்து போனார்..
தட்டுப்பாடு
பெருமூச்சு
பொக்கிஷம்
ஓரவஞ்சனை
Thursday 11 November, 2010
தோல்வி காதலில் அல்ல
இதயங்கள் கூடிய மாநாட்டில்
காதலில் வென்ற இதயங்களை
கை தூக்கிடச் சொன்னார்கள்...
நானும் தூக்கிடுவதைப் பார்த்து
உன் வாழ்வில் தான்
காதல் கை கூடவில்லைஎன
இடை மறித்துத் கேட்டது
என்னையறிந்த இதயம் ஒன்று...
நல்ல முகம் பார்த்து
இதயத்தில் குடியேறும் காதலில்
தூய மனம் பார்த்து கூடிய
காதல் தான் எனது...
காதலிக்கும் காலத்தில்
தொட்டதிற்கெல்லாம் சண்டையிடும்
காதல்களுக்கு மத்தியில்
சண்டையே வராதா என்று
எங்களையே ஏக்கம் கொள்ளசெய்த
காதல் தான் எனது...
இவர்களின் காதலின் சுகத்தை
நாமும் பெற்றிட மாட்டோமா?
இப்படியே இந்த நொடியிலேயே
நின்றிட மாட்டோமோ என்று
காலத்தையும் சஞ்சலப் படுத்திய
காதல் தான் எனது...
இதுவா காதல் என்ற
எழுந்த கேள்விகளுக்கு நடுவில்
இதுவல்லவா காதல் என்று
கேள்விக்கு ஆச்சரியக் குறியோடு
முற்றுப் புள்ளி வைத்திட்ட
காதல் தான் எனது....
காதலித்து
திருமணத்திற்குப் பின்
காதலைத் தொலைத்து விட்டு
காதலன் காதலியாய் இல்லாமல்
கணவன் மனைவியை வாழும்
இன்றைய காலத்து மனங்களில்,,
காதல் தந்த நினைவுகளை
நெஞ்சில் புதைத்து கொண்டாடி
அதன் நினைவுகளிலே வாழும்
என் காதல் சிறந்ததே...
என் தோல்வி காதலில் அல்ல...
வாழ்வில் அவளைப்
பெற முடியாததில் மட்டுமே...
காதலில் வென்ற இதயங்களை
கை தூக்கிடச் சொன்னார்கள்...
நானும் தூக்கிடுவதைப் பார்த்து
உன் வாழ்வில் தான்
காதல் கை கூடவில்லைஎன
இடை மறித்துத் கேட்டது
என்னையறிந்த இதயம் ஒன்று...
நல்ல முகம் பார்த்து
இதயத்தில் குடியேறும் காதலில்
தூய மனம் பார்த்து கூடிய
காதல் தான் எனது...
காதலிக்கும் காலத்தில்
தொட்டதிற்கெல்லாம் சண்டையிடும்
காதல்களுக்கு மத்தியில்
சண்டையே வராதா என்று
எங்களையே ஏக்கம் கொள்ளசெய்த
காதல் தான் எனது...
இவர்களின் காதலின் சுகத்தை
நாமும் பெற்றிட மாட்டோமா?
இப்படியே இந்த நொடியிலேயே
நின்றிட மாட்டோமோ என்று
காலத்தையும் சஞ்சலப் படுத்திய
காதல் தான் எனது...
இதுவா காதல் என்ற
எழுந்த கேள்விகளுக்கு நடுவில்
இதுவல்லவா காதல் என்று
கேள்விக்கு ஆச்சரியக் குறியோடு
முற்றுப் புள்ளி வைத்திட்ட
காதல் தான் எனது....
காதலித்து
திருமணத்திற்குப் பின்
காதலைத் தொலைத்து விட்டு
காதலன் காதலியாய் இல்லாமல்
கணவன் மனைவியை வாழும்
இன்றைய காலத்து மனங்களில்,,
காதல் தந்த நினைவுகளை
நெஞ்சில் புதைத்து கொண்டாடி
அதன் நினைவுகளிலே வாழும்
என் காதல் சிறந்ததே...
என் தோல்வி காதலில் அல்ல...
வாழ்வில் அவளைப்
பெற முடியாததில் மட்டுமே...
வித்தியாசம்
முயற்ச்சித்திருப்பேனடி
காதல் வாழ்க்கையே போதுமென்பேன்
உன் கொஞ்சல் பேச்சுகளை
எண்ணியே கரைந்து போய்விடும்
பெரும்பாலான தனிமைப் பொழுதுகள்...
என் தோளில் சாய்ந்தபடியே
எண்ணிப் பார்க்க மறந்துபோன
நிமிடங்களை தின்று தீர்த்த பேச்சுகள்...
சில்மீஷப் பார்வை தீண்டல்கள்...
எல்லை மீரா காதல் களியாட்டங்கள்...
எண்ணிக்கையில் தொடங்கிடச் செய்து
எண்ணம் தடுத்திடும் வரையிலான
காதல் முத்தங்கள்...
அர்த்தமற்ற கோபத்தினை
முடித்து வைத்திடும் அணைப்புகள்...
விரல் சொடுக்கியபடியே
நீ தெரிவித்திடும் விருப்பங்கள்...
நேரமாகிவிட்டதென கடிகாரத்திடம்
சொல்லிவிட்டு என் தோள் சாய்ந்தபடியே
நீ செய்திட்ட நிமிட நீட்டிப்புகள்....
இதோடு கடைசிஎன சொல்லிச் சொல்லியே
நடுநிசி வரையிலான குறுஞ்செய்திகள்...
தனக்கான விருப்பங்கள் இன்றியும்
எனக்காய் பிடித்ததை காட்டிடும் அன்பும்...
காய்ச்சலில் வீழ்ந்த என்னைவிட
என்னை எண்ணியபடியே
சோர்ந்து போன உன் முகமும்...
என் சிறுவயது புகைப்படம் பார்த்ததும்
நானும் உன்னிடத்தில் பெற்றிடாத
முத்தங்களும், கொஞ்சல்களும், வர்ணனைகளும்....
எதிர்காலம் முழுவதும் எல்லாம்
அனாயசயமாய் வார்த்தைகளிலே
வாழ்ந்து கழித்த நிமிடங்கள்...
என இப்படியே வாழ்ந்திடத் தோணுதடி
இதில் எவையேனும் ஒன்றினையும்
அனுபவித்திட முடியுமாஎன்ற எண்ணத்திலே
காதல் வாழ்க்கையே போதுமென
என்னிதயம் கெஞ்சி மன்றாடுகிறது என்னிடம்
திருமணம் பற்றி நீ பேசிய நொடிகளில்....
எண்ணியே கரைந்து போய்விடும்
பெரும்பாலான தனிமைப் பொழுதுகள்...
என் தோளில் சாய்ந்தபடியே
எண்ணிப் பார்க்க மறந்துபோன
நிமிடங்களை தின்று தீர்த்த பேச்சுகள்...
சில்மீஷப் பார்வை தீண்டல்கள்...
எல்லை மீரா காதல் களியாட்டங்கள்...
எண்ணிக்கையில் தொடங்கிடச் செய்து
எண்ணம் தடுத்திடும் வரையிலான
காதல் முத்தங்கள்...
அர்த்தமற்ற கோபத்தினை
முடித்து வைத்திடும் அணைப்புகள்...
விரல் சொடுக்கியபடியே
நீ தெரிவித்திடும் விருப்பங்கள்...
நேரமாகிவிட்டதென கடிகாரத்திடம்
சொல்லிவிட்டு என் தோள் சாய்ந்தபடியே
நீ செய்திட்ட நிமிட நீட்டிப்புகள்....
இதோடு கடைசிஎன சொல்லிச் சொல்லியே
நடுநிசி வரையிலான குறுஞ்செய்திகள்...
தனக்கான விருப்பங்கள் இன்றியும்
எனக்காய் பிடித்ததை காட்டிடும் அன்பும்...
காய்ச்சலில் வீழ்ந்த என்னைவிட
என்னை எண்ணியபடியே
சோர்ந்து போன உன் முகமும்...
என் சிறுவயது புகைப்படம் பார்த்ததும்
நானும் உன்னிடத்தில் பெற்றிடாத
முத்தங்களும், கொஞ்சல்களும், வர்ணனைகளும்....
எதிர்காலம் முழுவதும் எல்லாம்
அனாயசயமாய் வார்த்தைகளிலே
வாழ்ந்து கழித்த நிமிடங்கள்...
என இப்படியே வாழ்ந்திடத் தோணுதடி
இதில் எவையேனும் ஒன்றினையும்
அனுபவித்திட முடியுமாஎன்ற எண்ணத்திலே
காதல் வாழ்க்கையே போதுமென
என்னிதயம் கெஞ்சி மன்றாடுகிறது என்னிடம்
திருமணம் பற்றி நீ பேசிய நொடிகளில்....
Wednesday 10 November, 2010
அறுவடை
Wednesday 3 November, 2010
வெகுமதி
வழி மறிக்கின்றன
குரு - சிஷ்யன்
உனக்கேன் பொறாமை
Subscribe to:
Posts (Atom)