Monday 27 December, 2010

அவளது நினைவில் நான்

முரடனாய் திரிந்த எனக்கு
தோழியாய் வந்தமைந்தவள்...

நான் புரியும் தவறுகளுக்கு
அன்பினால் தண்டித்தவள்...

கல்வியையும், காலத்தையும்
கற்றுக்கொடுத்தவள்..

என் எதிர்மறை ஆட்டத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்தவள்...

தோழியென்ற வார்த்தைக்கு
அகராதி செயவித்தவள்...

தனித்திருந்த என்னை குடும்பத்தோடு
இணைத்தவள்...

என் பெற்றோரும் பாராட்டா
என் திறமையை வெளிக்கொனர்ந்தவள்....

இவள் அன்பினில் வாழ்கை கழியாதா
என்ற ஏக்கத்தை உண்டாக்கியவள்...

புரிந்த தோழியை விரும்புவது தகுமோ
என்ற வினாவை கேட்டவள்...

கடைசியில் என்
இதயத்துணையாய் நின்றாள்...

ஜாதியின் பசிக்கு
இரையாகும் காதலில்
எங்களது ஏழரை ஆண்டு காதலும்
விதிவிலக்கல்ல...

என் உயிர் பறிக்கும்
பாசக்கயிர்றைக் காட்டி
அவளுடன் என் பாசத்தை பிரித்தனர்...

மனதினை புதைத்து
திருமணத்திற்கு பந்தற்கால் நட்டனர் ...

அவளது நெஞ்சில் மாங்கல்யம் தொங்கிட...
எனது நெஞ்சை காதல் நினைவுகள் இறுக்கிட..

இன்று அவள் நினைவில்
நான் உள்ளேனோ என்று தெரியாது
அவளது நினைவில் நான்...

No comments:

Post a Comment