Tuesday 7 December, 2010

நீயில்லா நான்

அடிக்கடி உன்னை
உப்பு மூட்டை சுமக்கச்
சொல்லும் பொழுது
பூ மூட்டையான உன்னை
உப்பெனச் சொல்லிக் கொள்ள
உடன்பாடில்லை தானெனக்கு...
சிறிது நாட்களிலே
புரிய வைத்துவிட்டாயடி அன்பே...
நீயில்லா என் வாழ்க்கை
குப்பையில் வாசம் கொள்ளும்
உப்பில்லாப் பண்டமென்று...

No comments:

Post a Comment