Monday 27 December, 2010

குடையும் கேள்வி

முத்தமிட்ட பிறகும்
உன் நினைவாய்
கொஞ்ச நேரம் என்னோடு
ஒட்டிக் கொண்டிருக்கட்டும் என்று
என் எச்சில் பட்ட
இடத்தையும் துடைத்திட மாட்டாயே...
இந்நொடி வரையிலும்
என் நினைவுகள் சிறிதேனும்
உன்னில் ஒட்டியுள்ளதா? என்ற
கேள்வு என்னைக் குடைகிறது அன்பே...

No comments:

Post a Comment