Tuesday 7 December, 2010

ஏமாற்றம்

ஏமாற்றம்.
தாங்கிக் கொள்ளத் தயங்கும்,
புறம்தள்ள முடியா நிகழ்வு.
ஒவ்வொருமுறை ஏமாறும் பொருட்டு
கண்ணீர் பொங்கும் மனம் - இன்று
ஏமாற்றத்திற்காய் ஏங்குகிறது...
நீயென்னை ஏமாற்றி
என் முன் பூக்கும் - கபடமற்ற
உன் சந்தோசச் சிரிப்பில்
இப்படி ஏமாளியாகவே
மாறிடக் கூடாதா என்று...

No comments:

Post a Comment