Saturday 11 December, 2010

காதலே இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்...

காதலுக்காய் காத்திருப்போருக்கெல்லாம்
எட்டாக் கனியாகி - கனவிலும்
காதலிக்கா என் மனதில் ஏனடி உதித்தாய்....

முட்செடிகளைப் போன்றதொரு வாழ்க்கையினில்
பெரும்பகுதி கழித்த பின்னர்
பூந்த்தோட்டத்திற்கு ஏனடி ஏதிர்பார்க்க வைத்தாய்...

பெயருக்கும் பாசத்தைப் பார்த்திரா
பாலையாகிப் போன பாழான இதயத்தில்
சோலையாக ஏனடி மாற்றிடச் செய்தாய்...

சிரித்துக் கூட பழக்கப்படா என் இதழில்
வாஞ்சையில்லா உன் கன்னம் பிதுங்கும்
சிரிப்பிற்க்காய் ஏனடி என்னை ஏங்கிச் செய்தாய்...

பட்டமரம் போல் வாழ்ந்து
பாசம்பற்றி தெரியாது வளர்ந்து இன்று
உன் அன்பிற்கு
ஏனடி பரிதவிக்க வைத்தாய்....

நொடிக்கணக்கில் சிரிப்பும்
மணிக்கணக்கில் மௌனத்தையும்
தோழனாய் வைத்திருந்த என்னை
உன் பேச்சினில் ஏனடி எதிரியாக்கினாய்...

நீ தான் வாழ்க்கை எனத் தெளிந்து
உனக்காய் மாற்றங்களை
மறுப்பேதுமின்றி அணிந்துகொண்டேன்...

உம்மென்ற கோவத்தையும் சிறிது சிறிதாய்
இதழ்களின் அசைவிலே உடைத்தெறிந்தேன்...

கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து திரிந்த
என் வாழ்க்கையின் நாட்களை
உன் சொற்களில் கடிவாளமிட்டு
அடிபணியச் செய்திட்டேன்...

உன்னை மட்டும் என் உயிரென
எண்ணித்தான் புதியதாய் ஜனனித்தேன்...

ஒவ்வொரு நொடியிலும் உன் அணைப்பிலே
மறுநொடி பிரிய நேரிட - அப்படியே
உறைந்து போக யோசித்திட்டேன்...

வாஞ்சையில் காதலித்து,
கோபத்தில் கண்டித்து
குறும்பாய் கண்ணடித்து
ஆசையாய் முத்தமிட்டு
ஏமாற்றத்தில் கன்னமறைந்து
காதலில் கட்டியணைத்து
தோல்வியில் தோள்கொடுத்து
கனவிலும் உடன்வந்து
அன்னையாய் ஊட்டிவிட்டு
மழலையாய் கரம்பிடித்து
தோழியாய் தோள்சாய்ந்து
அன்பாய் அரவணைத்து
செயலில் துணை நின்று
உறக்கத்தில் மடி தந்து
விரக்தியில் நிழலாக
வெற்றியில் பரிசாக
உடலில் உயிராக
உயிரில் உணர்வாக
ஏனடி இருந்து தொலைந்தாய்...

இப்படி என்னை மட்டும் தவிக்க வைத்து
நீ மட்டும் தொலைந்து போவதற்கா?

உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...

உனக்கும் வலித்திருக்கும்
எனக்கும் நன்றாகவே புரியுமடி...
சந்தோசமாய் உள்ளேன் என பொய்யுரைத்து
உன் எண்ணத்தில் கல்லெறிய
துளியும் மனமில்லையடி எனக்கு...
உனது சந்தோசத்திர்க்காய்
என்னவேண்டுமானாலும் பொய்யுரைப்பேன் என்று
என்னைப் பற்றி உனக்குத் தெரியுமென்பதால்...

நினைவு இனிமையாகத் தான் இருந்தது அன்பே
என்னருகில் நீ இல்லாத பொழு - இன்று
அந்த நினைவோ மிகக் கொடியதாய் மாறிவிட்டது
எனக்காய் நீ இல்லாத பொழுது....

மரணத்தை தள்ளி வைத்திடும்
எண்ணமெல்லாம் எனக்கில்லை அன்பே...
என் ஆயுளையும் இரவினையும்
உண்டு பெருத்து அடங்காப் பசியோடு
என் அடுத்தடுத்த நொடிகளை
ருசித்திட இருக்கும்
நம் காதலின் நினைவுகளுக்காகவே
விரும்பியே எதிர்ப்பார்க்கிறேன் மரணத்தை...

உடல் விட்டுப் போன உயிர்
திரும்பிடாத பிணமாகத் தான் வாழ்கிறேன்...
என் சரீரம் நீ விட்டுப் போனதிலிருந்து,
உணர்ச்சியின்றி, மகிழ்ச்சியின்றி
திரியும் என்னைப் பார்த்து தான்
நடைபினமென்னும் வார்த்தை உண்டானதோ...

நான் படும் வலிகள் யாவும் உனக்கும்
உண்டென்று தானடி என்னிதயம் வலிக்கிறது...
உன்னைக் கலங்கிட விடாமல்
உன் தலைகோதி
தனிமை உனையண்டாது விரட்டியடிக்க,,
உன்னையறிந்த நான் உன்னருகில்
இல்லையென்ற ஏக்கத்துடன்,
நொடிக கணத்திலும் பிரிவென்னும் இருளில்
உன் நினைவுத் தீ கொழுந்துவிட்டு எரிய
இதயம் மெழுகாய் உருகி
வாழ்கிறேன் கண்களில் கண்ணீரோடு ...

2 comments:

  1. ithuku mela unga feelings'a solla mudiyalaya....

    ReplyDelete
  2. வாஞ்சையில் காதலித்து,
    கோபத்தில் கண்டித்து
    குறும்பாய் கண்ணடித்து
    ஆசையாய் முத்தமிட்டு
    ஏமாற்றத்தில் கன்னமறைந்து
    காதலில் கட்டியணைத்து
    தோல்வியில் தோள்கொடுத்து
    கனவிலும் உடன்வந்து
    அன்னையாய் ஊட்டிவிட்டு
    மழலையாய் கரம்பிடித்து
    தோழியாய் தோள்சாய்ந்து
    அன்பாய் அரவணைத்து
    செயலில் துணை நின்று
    உறக்கத்தில் மடி தந்து
    விரக்தியில் நிழலாக
    வெற்றியில் பரிசாக
    உடலில் உயிராக
    உயிரில் உணர்வாக
    ஏனடி இருந்து தொலைந்தாய்...



    arumai!! nandraaga irukirathu!!!

    ReplyDelete