Tuesday 7 December, 2010

கண்ணீர் சுவடு

நிஜம் தூங்கிடும் பொழுது
நிழல் மெல்ல எட்டிப் பார்க்கிறது..
நிஜ உலகின் நிதர்சன உண்மைகள்
நினைவுகளாய் என்னில் கனவுகளாய்
நிஜமாய்க் காட்டிடுது உறக்கம்...
நித்தமும் உன் மடி படுத்துறங்க,
நிலையாய் உன் காதல் அடிமையாய்,
நிழலாய் உன் அணைப்பில் வாழ,
நிமிடங்கள் உன்னருகில் வரங்களாய்,
நிறம் மாறிடாத உன் புன்னகையாய்,
நீட்டிக்க விரும்பிடும் தனிமைகளும்,
நிம்மதி பெருமூச்சிடும் உன்னிதயமும்,
நித்தமும் இப்படி இம்சிக்கும்
நின் நினைவுகள் என எண்ணுகையில்,
நிதர்சன உண்மையாய் உணர்த்திடுதே,
நித்தம் காலை எழுகையில்
நிரந்தரமாய் கண்ணோரம் கண்ணீர் சுவடு...

No comments:

Post a Comment