என்னவள் ஆசை பட்டதையெல்லாம்
நிறைவேற்றி வைத்திடுவேன்...
அவள் கேட்காததாயினும்..
ஆனாலும் அவளை கேட்டும்
நிறைவேற்றிடத் தயக்கம்...
என்னைப் போலே மகன் வேண்டுமாம்.
இதில் தயக்கமாஎன வினவாதிர்.
என்னைப் போன்று பிறந்திடுகையில்
என்னிடம் காட்டும் பாசமும்
அவனிடத்தில் என்றுமே செலுத்திடுவாள்...
என் பெயரைக் கொண்ட குழந்தைக்கே
முத்தத்தால் மூச்சு முட்டிடச் செய்தவள்
என்னைப் போன்று பிறந்திட்டால்
சொல்லவா வேண்டும் என் நிலையை...
No comments:
Post a Comment