Tuesday 19 October, 2010

காதல்

காதல்
வெள்ளிப் பனியை மேல்போர்த்தி
மானுட நிம்மதியை இரையாக்க
காத்திருக்கும் நெருப்புக் கோளம்...
விரல் விட்டால் சுட்டுவிடும்.
தீண்ட நினைத்து தொட்டவர் பலர்
என்று எச்சரித்தனர் என்னை...
பருவவயது பயம் அறியோம்..
வலியை ருசித்திட எண்ணி
காதலை அறியத் துடித்தேன்...
பட்டவுடன் உணர்ந்திடும் வேளையிலும்,
கட்டாய வெளி ஏற்றத்திலும்,
வெறுமையாய் கரைந்த நாட்களிலும்,
கண்ணீரையே உணவாக உண்ட இரவுகளிலும்,
உயிர் துறக்க எத்தனிக்கும் வேளையிலும்,
கண் விழித்தும் தெளியாத
கண்தழுவிய கனவுகளாய் போகையிலும்,
காதல் நீங்காத தழும்பாய்
நெஞ்சில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment