சுனாமியாய் வந்து
பின் அலையாய் காலை நனைத்த
நம் காதலின் எதிர்ப்பு...
பத்திரிகை, துணி எடுக்கையில் கூட
உன் மதி முகம் பார்த்து
சம்மதம் கேட்டு....
கல்யாண நேரம் நெருங்கிட
நெஞ்சினில் போர்க்கால
பதற்றம் படபடக்க...
நம் காதலைச் சொல்லி
இதயங்கள் பரிமாறிய தினத்தன்றே
திருமணம்....
காதலுக்கு துணை நின்ற
நெஞ்சங்களோடு
முன்தினக் கொண்டாட்டம்...
மனம் கூடி மகிழ்ச்சி பொங்க
உனக்கு மாங்கல்யத்தோடு
எனக்கு பற்றிய உன் கரங்களோடு
நம் வாழ்க்கை தொடங்க...
அன்றைய இரவெல்லாம்
நம் காதல் வெற்றியின் கும்மாளம்...
ஈரைந்து மாதங்களில்
நம் காதல் பரிசை பெற்றிட...
அவளை அரட்டி மிரட்டிட
ஒரு தம்பியும் பிறந்திட...
வார இறுதியில்
நம் கொண்டாட்டம் கண்டு
இன்னும் நீள்வோம் எனறு
வார இறுதியும் கெஞ்சிட...
உன் கைபட்டு பரிமாறும் உணவும்...
உன் மடியில் நான் மழலையாய்
மடியில் இருக்கும்
என்னைக் கொஞ்சிடும் தாயாய்...
இப்படி எல்லாம் வாழ்ந்திட
நமக்கு விதி இல்லை
என்றதால் என்னவோ
நம் எதிர்கால
வாழ்க்கையை எல்லாம்
பேச்சிலும் கற்பனையிளுமே
வாழ்ந்துவிட்டோமடி....
No comments:
Post a Comment