Thursday 14 October, 2010

கலந்துவிட்டாள்


தென்றல் வீசும் மாலைப் பொழுதினிலே
மல்லி போன்றே மங்கையும் பூத்திருக்க..
சின்னப் பார்வை என்னைப் பார்த்து
கண்களாலே என்னைச் சிறைபிடித்தாள்..

என்னை நினைக்கும் இதயத்தை
அவளை நினைத்திட கட்டளையிட்டாள்.
சிறு புன்னகையிலே என் வாழ்வை
அவளுக்கென மாற்றிக்கொண்டாள்.

நுழைவு சீட்டாய் பார்வை வீசி
இதயத்தில் அமர்ந்துகொண்டாள்.
என்னருகில் அமரும் பொழுதினிலே
என் மூச்சுக் காற்றாய் கலந்துவிட்டாள்.

கல்வி கற்க மறக்கடித்து
கவிதை எழுத கற்றுக் கொடுத்தாள்.
நிம்மதி என்பதனை மறக்கச் செய்து
கனவிலும் என்னை ஆட்சி செய்தாள்.

கண்களிலே காதல் சொல்லியே
மௌனத்திலே மொழி பெயர்த்தாள்.
காதலில் என்னை கட்டிவைத்து
கூட்டத்திலிருந்து என்னை தனிமை ஆக்கினாள்

காதலை என்னுள் புதைத்து விட்டு
என் உயிரினுள் அனுவாய் கலந்துவிட்டாள்...

No comments:

Post a Comment