செங்காந்தள் மலருடையாள்,
தும்பைப் பூ மனமுடையாள்.
செல்லச் சினம் எட்டிப் பார்க்க
காதற்சொல் கதைக்கும் மொழியாள்
விழியில் பாதி உயிரெடுத்து
காதலில் மீதி நிரப்பிட்டாள்.
இதயம் மட்டும் திருடிச் சென்று
காதல் வரம் தந்த கயல்விழியாள்.
என் விழியில் கருவாய் மாறி
பாசம் காட்டி என் தாயோடு
மல்லுக்கு நிற்கும் குணவதியாள்...
No comments:
Post a Comment