Tuesday 19 October, 2010

காதலில் கிடைத்த தாய்க்கு வேண்டுதல்

எந்த தாய்க்கும்
முதல் குழந்தை தானே செல்லம்...
நீ மட்டும் ஏன் தாயே
என்னை அரவணைக்காமல்,
உன் பாசத்திற்க்காகவும்,
வருகைக்காகவும் ஏங்கி தவிக்கவிட்டு,
உன் இரண்டாம் குழந்தையான
நீ பெற்ற பிள்ளையை மட்டும்
கொஞ்சிக் களிக்கிறாய்...
என்ன இருந்தாலும்
வேறொரு அன்னை சுமந்து பெற்ற
பிள்ளை தானே நானும்...

No comments:

Post a Comment