கடிகாரத்தில் நான் குண்டாய்
நகர மறுக்கும் சிறிய முள்ளாய்,
என்னை விரட்டிப் பிடித்திடும்
நெடுமுள்ளாய் நீயும்,
விளையாட்டாய் நாம் பேசிய
வார்த்தைகள் யாவும்
வினையாகச் செய்தது விதி...
உனக்கு மட்டும்
நிச்சயதார்த்தம், திருமணம்,
வளைகாப்பு, குழந்தைப்பேறு என்று
அடுத்தடுத்து அணிவகுத்து
நாட்கள் ஓடிக்கொண்டிருக்கையில்,
எனக்கு மட்டும்
நம் காதலின் நினைவுகளிலேயே
நகர்ந்து கொண்டிருக்கிறதடி நாட்கள்
சிறிய முள்ளைப் போலே...
wonderful.......awesome poem Tamil.....
ReplyDelete