Wednesday 13 October, 2010

குழந்தையின் ஏக்கம்


சிறு வயது முதலே
குடும்பத்தில் தினம் தினம்
சண்டைகள் சச்சரவுகள்...
தாய் மடியின் அணைப்பு கூட
இதுநாள் வரை கண்டதில்லையடி.
உன்னைக் காதலித்த பின்னே
அச்சுகம் கண்டேனடி உன்னிடத்தில்
உன்னை என் தாயாக மாற்றி...
இன்று தாயை தொலைத்த குழந்தையாக
உன் மடிக்காக ஏங்கிக் கிடக்கிறேன்...
ஆனால் நீயோ
உனது குழந்தையின் அழுகையை நிறுத்த
தாலாட்டிக் கொண்டிருக்கிறாய்
என்னை அழ வைத்துவிட்டு...

No comments:

Post a Comment