Sunday 10 October, 2010

மழை

நீயில்லா நேரங்களில்
மழை பொழியும் பொழுது,
அலைபேசியில் கடிந்து கொள்வாய்
மழையில் ஆடுகிறாயா என்று...
மழையில் நனைந்து
உடல்நலம் பாதிக்கும் என்றல்லவே...
உன்னை விட்டு ஆடுவதால் தான் என்று
நன்றாக நானறிவேன் செல்லமே...
இன்றும் மழை பெய்திட
நனையத் தானடி செய்கிறோம்
நானும், உன் நினைவின்
வெளிப்பாடான கண்ணீரும்...

No comments:

Post a Comment