விட்டுச் செல்லாதே என்று
உன்னிடம் மன்றாடிய பொழுது
சிறிதேனும் செவி சாய்க்காமல்
எனைவிடுத்துப் பிரிந்து சென்றாய்...
என்னை விட்டுப் போய்விடு என
மன்றாடி கெஞ்சிக் கூத்தாடியும்
பிரிந்து போக மறுக்கிறது
உனது மிச்சமான நினைவுகள்...
உனக்கும் உந்தன் நினைவிற்கும்தான்
எத்துணை முரண்பாடுகள்..
எத்துணைக் காதல் தான்
என் மேல்...
No comments:
Post a Comment