Thursday 28 April, 2011

காதலன் ஏக்கம்

ஒவ்வொரு நாளும் கழிகின்றது
வண்ணமான நாட்கள் வெறுமையாய்
உன்னிடம் காதலை சொல்லப்படாமலே...

உன்னிடம் சேர்ந்து விடலாமென
என்னிலிருந்து புறப்பட்ட இதயம்
காதலில் உன் முகவரி தெரியாமல்
நிற்கிறது அன்பே அனாதையாய்...

நிஜத்தை பார்த்தே நம்பிடா உலகில்
உன்னையே எண்ணிக் கொண்டிருக்கும்
நினைவுகளையா நம்பிவிடப் போகிறாய்...

பிறந்த இடம், புகுந்த இடமென்று
பெண்களுக்கு மட்டும் பொருந்துவதிலையே
உன் நினைவைச் சுமக்கும்
என் இதயத்திற்கும் தானடி...

வரதட்சணையாய் கண்ணீரையும
தூக்கம் மறந்த இரவுகளையும்
தனிமைப் பேய்க்கு இரையாகத் தந்தும்
இன்னும் ஏனடி மௌனம் கொள்கிறாய்...

என் வரிகளைப் போலவே
நீளும் உன் மௌனத்திற்கு
உன்னிதழ் திறந்து முற்றுப் புள்ளியோ
மனம் திறந்து கார் புள்ளியோ வையடி...
கண்டுகொள்கிறேன் என் காதலின் ஆயுளை...

No comments:

Post a Comment