Thursday 28 April, 2011

உன்னை தொலைத்த நான்

உரமிட்டு பாதுகாத்து
எனக்கெனச் சொந்தமாய் எண்ணி
எப்பொழுது மலர்வாய் என நானும்
முப்பொழுதும் உன் கருத்தில் என நீயும்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்,
நீ மலர காத்திருக்க,
உரிமை என ஒருவன் வந்து
கே
ளாமல் பறித்துச் செல்ல,
உன்னைப் பறிகொடுத்த வலியில்,
ரோஜாவின் முட்கள் யாவும்
தொட்டால் குத்திட,
என்னிதயம் சூழ்ந்த உன் நினைவுகள்
நினைத்தாலே குத்துகிறதே...

No comments:

Post a Comment