Saturday 9 April, 2011

பேருந்து பயணம்

ஜன்னலோர இருக்கையில்
உன் தோள் சாய்ந்து பயணிக்கையில்,
தென்றலாய் உன் முடிக் கீற்று தழுவிட,
உன் வாசனையில் என்னிலை மறக்க,
பேசிடும் வேளை எச்சில் சாரலில் நனைந்து,
எதிர்கால கனவுகளில் திளைத்த நொடிகள்
இப்படியே ஊர்ந்திட நினைக்கையில்
உனக்கான நிறுத்தம் வந்திட
நிரந்திரமாய் இறங்கிக் கொண்டாயடி.
ஆனாலும் அச்சுகம் மன வேண்டுகையில்
அதே ஜன்னலோரப் பயணம்.
அதே தலை சாயல்
தென்றலின் உருவில் உன் நினைவுகள்...


No comments:

Post a Comment