Thursday 28 April, 2011

எனக்கு பிடித்தவைகள்

மதி மாலை நேர மழை
நடு இரவு பௌர்ணமி.
நிலவோடும் நினைவோடும் தனிமை.
பிஞ்சுக் குழந்தையின் பற்றிடும் விரல்.
நண்பர்களுடன் பகிர்ந்துண்ணும் நேரம்.
இரவின் மொட்டை மாடி தனிமை.
என்னவள் ரசித்த வரிகள்.
புகைவண்டியின் ஜன்னலோர இருக்காய்.
நீண்டதொரு இரவு இருசக்கர பயணம்.
அவள் தோள் சாய்ந்த தூக்கம்.
நண்பனின் உரிமைக் கோபம்.
அரிதாகிப் போன சொந்தங்களின் கூட்டம்.
செயற்க்கைதனமிலா கிராமத்து திருவிழா.
வீரத் தமிழனின் தாரை தப்பட்டை.
தோல்வியினைத் தந்திட்டாலும் காதல்.
உப்பு கரித்திட சந்தோசக் கண்ணீர்.
தொலைந்து போன சிறுவயது பண்டங்கள்.
முழுதாய் என்னைச் செதுக்கிய தோல்விகள்.
நிரந்திரமில்லை எனத்தெரிந்தும் போராடும் வாழ்க்கை.

No comments:

Post a Comment