Thursday 21 April, 2011

காதலின் சில நினைவுகள்

கற்கண்டாய் அழகிய வாழ்க்கை.
கற்பனைக் கருவில் வாரிசுகள்.
கண்ணின் கரு விழியில் என் கருவாச்சி.
கன நொடியும் பிரிய
மறுக்கும் நினைவுகள்.
காத்திருக்கும் அற்புத நொடிகள்.
கனவுகள் சுமக்கும் நிசப்த இரவுகள்.
கண்ணீரில் இனிப்பாய் உன் மகிழ்ச்சி.
கவிதை எங்கும் உன் குறிப்புகள்.
கற்பனையில் நம் வாழ்க்கை முறை.
கண்டவரும் ஏங்கும் நம் பாசம்.
கவனித்தவர் மருகும் கொஞ்சல்கள்.
காதலுக்கு எடுத்துக்காட்டாய் நாம்
கட்டாய வெளியேற்றத்தில் கண்ணீர்.
கன்னம் கனியச் செய்த முத்தங்கள்.
கடுகளவும் காற்றுக்கு இடமில்லா அணைப்புகள்.
கரம் பற்றி நினைவு பதித்த பயணங்கள்.
கட்டிக் கொண்டே செல்லலாம் நினைவாலே
காதல் தாஜ்மகாலை..

No comments:

Post a Comment