விடை பெறும் நேரம் கண்டு
மருகும் இதயம்,
சில நேரம் அதற்காக
ஏங்கவும் செய்கிறது...
விடை பெற்று செல்லும் பொழுது
என்னைக் கண்ணுக்குளேயே
பூட்டி வைத்திருந்தும்,
காணத் துடித்திடும்
உனது பார்வையிலும்,
எனது திசை பார்த்திடும்
தலை திருப்பலிலும்,
உனது அதிகப்படியான
அடங்காத காதலைக் கண்டிட...
No comments:
Post a Comment