Tuesday 20 September, 2011

கரையாத உன்னிதயம்

விடியாத நீண்ட இரவுகளோடு
தினம் தினம்
மல்லுக்கட்டிக் கொண்டே
நகரும் எந்தன்
உறக்கமற்ற நாட்கள்...

காதோரம் காதல் மொழியில்
எனைக் கிறங்கடித்த
ரகசியப் பேச்சும்...

வாஞ்சையான சிரிப்பை
காணும் போதெல்லாம்,
தமக்கே சொந்தமாகாதவென
கண்களோடு இதயமும் கெஞ்சும்...

மௌனம் கூறும்
வார்த்தைகளின் ரணம்
வலி தாங்கா இதயத்தை
சிறுகச் சிறுக
செல்லரிக்கச் செய்திடும்...

எறும்பு ஊரக்
கல்லும் கரைகையில்,
நாட்களும் கரைய
கரையாத உன்னிதயம்
கல்லைவிட கடினமோ...

விடை தெரியாது புலம்பிடும்
என்னிதயம் என்ன விசனமோ...

No comments:

Post a Comment