தனியாய் வாழும்
எறும்பாய்
தரையில் மிதக்கும்
மீனாய்
பிறை இல்லா
நிலவாய்,
பொம்மை விரும்ப
குழந்தையாய்,
விடிய மறுக்கும்
இரவாய்,
பொன் பிடிக்க
பெண்ணாய்,
மரம் மறுக்கும்
குரங்காய்,
இரை விரும்பாத
விலங்காய்,
சோகம் தொலைத்த
கண்ணீராய்,
இவற்றுள் மனித இயல்பில்
தடம் மாறி பயணிக்கும்
காதலில் விழுந்த நான்
No comments:
Post a Comment