Tuesday 20 September, 2011

பெண் நட்பு

ரகசியம் பரிமாறிய பொழுதுகளிலும்,
சிநேகம் வளர்த்த அன்பிலும்,
கண்ணீர் உடையும் பிரிவுகளிலும்,
அருகருகே அமரும் நெருக்கத்திலும்,

பகிர்ந்து உண்ட வேளைகளிலும்,
உடன்பிறப்பாய் செய்திடும் உதவிகளிலும்
தோல்வியில் கைதந்த நேரத்திலும்
ஆறுதலான தோள் சாயல்களிலும்

உரிமையில் பிறப்பெடுக்கும் கோபத்திலும்,
காதுமடல் திருகும் கண்டிப்பிலும்,
ஒளிவு மறைவிற்கான சண்டைகளிலும்
எதையும் செய்திடும் நட்பிலும்

தோள்களில் சாயும் தோழமையிலும்
தோழி சகோதரியாகும் வேளையிலும்
கண்ணீர் துடைக்கும் விரலிலும்
பாலுனர்வின்றி இருந்த தனிமைகளிலும்

வலியை உணர்த்திய பிரிவிலும்
இறுக கரம்பற்றிய ரகசியங்களிலும்
உணர்ந்த உன்னத நட்பு

நட்பறியா குருடர்கள் பார்வையிலும்
புறம்பேசும் புத்திமான்களின் பேச்சிலும்
சங்கடப் பட்டு வெளியே
எட்டிப்பார்க்க வேதனையோடு இன்று....

No comments:

Post a Comment