Wednesday 28 September, 2011

கற்கண்டு சாரலின்
இனிப்பில் நனைந்திட
மழையின் இரசிகன் நான்...

தாயின் உச்சி முகர்ந்த
முதல் முத்தமாய்
மீண்டும் பெறும்
மழையின் குழந்தையாய்
பிறப்பெடுப்பேன்...

தரையின் தேங்கிய
நீரில் தானும் விழுகையில்
நீர்க்குமிழ்கள் பிறப்பெடுக்கையில்
கூடவே அதனை ரசிக்க
உருமாற்றம் மழலையாய்...

ஒவ்வொரு முறையும்
கழிவுகள் அழித்து
புதிதாகும் பாதையை
மாறிடக் கேட்கும் மனம்
மழையில் நனைகையில்...

துளி துளியாய்
கோர்க்கும் வார்த்தைச் சாரலில்
கால் நனைக்கும் வாக்கியங்களில்
நானும் சங்கமித்து நனைகிறேன்
ஒரு குழந்தையின் சிரிபோடு...

No comments:

Post a Comment