Friday 30 September, 2011

விதிவிலக்கான என் காதல் குழந்தை...

முதன் முதலாய்
வைரத்தை கண்டவனின்
அலட்சிய அறியாமையில் தான்,
நீ சற்றும் புரிந்து கொள்ளாத
என் காதல்..

ஏகாந்த பார்வையின்
வீரியத்தில் பெரும்பாலும்
அடங்கிப் போகும் நாணலாய்,
உருமாற்றம் கொள்ளும்
ஆலமரமாகிய என் ஆண்மை...

நுரை பொங்கும்
அலையின் ஆர்ப்பரப்பில்
ஓடி அடங்கும் ,
உந்தன் வருகைக்கான
ஏக்கங்களுக்குக் சொந்தமான்
என் இதயம்...

கூடு திரும்பாத
பறவையின் பரிதவிப்பில்
இரவுக்கு அடைய மறுக்கும்
உன் உருவம் காணாத
என் பகல் பொழுதுகள்...

அழும் குழந்தையின்
கண்ணீரை எவரும்
வெகு நேரம் பார்ப்பதில்லை.
விதிவிலக்காய்,
உன் பார்வையில் கருவாகி
பிறப்பெடுத்த என் காதல்
குழந்தையை தவிர்த்து...

No comments:

Post a Comment