Tuesday 20 September, 2011

அர்த்தமின்றி தவிக்கும் காதல்

இதுவரை
ஓசையே கேட்டிராத செவியினுள்
உரக்க கதறி
அழுகும் ஓசையாய்...

பார்வை கண்டிரா
விழிமுன் கண்ணீரும்..

பாலையில்
ஏர்பூட்டிடும் விவசாயமாய்...

உணர்ச்சியில்லா
மரப்பாச்சி பொம்மையிடம்
சொல்லியதைப் போல்

என் காதலும்
அர்த்தமின்றி தவிக்கிறதே..

No comments:

Post a Comment