Monday 19 September, 2011

தந்தையும், தாயும்...

மூளை தகப்பனாய்
இதயம் தாயாய்.

உத்தரவு மட்டுமே
இடத்தெரிந்த மூளைக்கு,
உணர்வுகள் புரிவதில்லை
தாயைப்போல்...

நீ வாழ என்றால்
உன்னில் விலகிப் போன
அவளை மறந்து,
நினைவுகளைத் துறந்துவிட
என உத்தரவு தந்தையிடம்...

நீ வாழவேண்டுமென்றால்
அவள் நினைவோடு வாழ் என
எனை உணர்ந்து கூறுகிறது
என் நிலை அறிந்த தாய்...

No comments:

Post a Comment