Wednesday 17 November, 2010

முத்தம்

காதலிக்க ஆரம்பிக்கும் முன்
பட்டினியாய் இருந்தேன்...
சிறிது காலத்தில் அவளின்
பார்வையை உணவாய் கொண்டேன்...
காதல் கூடிய பின்பு
அருகாமையில் வயிறு நிரப்பினேன்...
ஆனால்
மீண்டும் மீண்டும் பசிக்கும்
சாபத்தைப் பெற்றேன்...
முதன் முதலில் முத்தத்தில்
உன் இதழ்களைச் சுவைத்ததில்...

No comments:

Post a Comment