Thursday 25 November, 2010

நினைவு தீக்குச்சி

வாழ்ந்த நிமிடங்கள் யாவும்
ஒவ்வொரு தீக் குச்சிகளாய்
என்னிதயத்தில் பத்திரமாய்...
உன் பெயர் கொண்டவளோ
உடல் வாகு, நடை உடையவளோ,
தென்றல் காற்றின் தொடுதலிலோ,
குழந்தை விரல் பற்றி நடக்கையிலோ,
நாம் வந்த பதிவை தாங்கி நிற்கும்
இடம் போகையிலோ,
இளம்பிள்ளையின் கெஞ்சல் பேச்சிலோ,
கண்ணில் குடியேறிப் போன கனவுகளிலோ,
பிடித்த பாடல் வரி பார்க்கையிலோ,
உன் அணைப்பை ஞாபகப்படுத்தும்
என் சட்டையின் இருக்கத்திலோ
அடக்க முடியா சிரிப்பின் கண்நீரிலோ,
படபடக்கும் பேச்சினில் தெறித்திடும்
எச்சில் துளியாய் மழைச் சாரலிலும்,
ஒவ்வொரு குச்சியாய் பற்றிட
காதல் நினைவுத் தீயில்
என்னிதயம் பற்றி
எரியத் தொடங்குகிறது அன்பே...

No comments:

Post a Comment