Saturday 13 November, 2010

கிடைத்திடுமா

சிவன்கோவில் பின்பக்கம்
அமைதியானதொரு சாலை...

என் வாழ்வில் எத்துணையோ முறை
தனியாக நானும்,
காதலிக்கும் நாட்களில் உன்னுடனும்,
இன்று மணமாகிப் பின்
உன் கரம் பிடித்தும்,
அந்த வழியே தான் கடக்கிறேன்...

சிறந்தது எதுவென்று கேட்கையில்
காதல் நாட்களில் நடந்தது தான்
மிகவும் பிடிக்கும் என்பேன்...

முன்பின் தெரியாத முகமும் கூட
தெரிந்த முகமாய் மிரட்டிடும்,

அடிக்கொரு முறை இதயம்
நொடிக்கு சதம் துடித்திடும்,

மரத்தின் கிளைகள் கூட
நாம் செல்லும் திசை காட்டி
தகவல் தருவதாய் தோன்றிடும்,

சுவர்களுக்கும் கண்கள் முளைத்து
நம்மையே பார்ப்பதாய் பிரம்மை,

வானின் செல்லும் பறவைகள் கூட
நம்மைப் பற்றி தகவல் சொல்வதாய்
எண்ணி பயந்த நிமிடங்கள்,

விட்டிற்கு சென்ற பின்னும்
சகஜ நிலைக்கு திரும்ப
மறுத்தே படபடக்கும் இதயம்,

ஆனாலும் ருசி கண்ட பூனையாய்
மீண்டும் உன்னுடன் நடந்திட
ஒற்றைக் காலில் தவம் கிடக்கும் காதல்,

இவை யாவும் இனிஒருபொழுதும்
கிடைப்பதில்லை என் வாழ்வில்..

No comments:

Post a Comment