Thursday 11 November, 2010

தோல்வி காதலில் அல்ல

இதயங்கள் கூடிய மாநாட்டில்
காதலில் வென்ற இதயங்களை
கை தூக்கிடச் சொன்னார்கள்...

நானும் தூக்கிடுவதைப் பார்த்து
உன் வாழ்வில் தான்
காதல் கை கூடவில்லைஎன
இடை மறித்துத் கேட்டது
என்னையறிந்த இதயம் ஒன்று...

நல்ல முகம் பார்த்து
இதயத்தில் குடியேறும் காதலில்
தூய மனம் பார்த்து கூடிய
காதல் தான் எனது...

காதலிக்கும் காலத்தில்
தொட்டதிற்கெல்லாம் சண்டையிடும்
காதல்களுக்கு மத்தியில்
சண்டையே வராதா என்று
எங்களையே ஏக்கம் கொள்ளசெய்த
காதல் தான் எனது...

இவர்களின் காதலின் சுகத்தை
நாமும் பெற்றிட மாட்டோமா?
இப்படியே இந்த நொடியிலேயே
நின்றிட மாட்டோமோ என்று
காலத்தையும் சஞ்சலப் படுத்திய
காதல் தான் எனது...

இதுவா காதல் என்ற
எழுந்த கேள்விகளுக்கு நடுவில்
இதுவல்லவா காதல் என்று
கேள்விக்கு ஆச்சரியக் குறியோடு
முற்றுப் புள்ளி வைத்திட்ட
காதல் தான் எனது....

காதலித்து
திருமணத்திற்குப் பின்
காதலைத் தொலைத்து விட்டு
காதலன் காதலியாய் இல்லாமல்
கணவன் மனைவியை வாழும்
இன்றைய காலத்து மனங்களில்,,

காதல் தந்த நினைவுகளை
நெஞ்சில் புதைத்து கொண்டாடி
அதன் நினைவுகளிலே வாழும்
என் காதல் சிறந்ததே...

என் தோல்வி காதலில் அல்ல...
வாழ்வில் அவளைப்
பெற முடியாததில் மட்டுமே...

No comments:

Post a Comment